Posts

Showing posts with the label கட்டுரை

ஸினஸ்தீஸியா

Image
நீங்கள் பார்க்கும் சிவப்புதான் நான் பார்க்கும் சிவப்பு என்று உங்களால் உத்தரவாதமாக சொல்லமுடியுமா?நீங்கள் பார்ப்பதுதான் உலகத்தில் எல்லோரும் பார்க்கும் சிவப்பா? அல்லது நீங்கள் பார்ப்பதுதான் சிவப்பு என்று எந்த அறிவை வைத்து சொல்கிறீர்கள்? இளையராஜாத்தனமான கேள்விதான். இப்படி வைத்துக் கொள்ளுங்கள், பிறந்ததிலிருந்தே நான் சிவப்பு என்று நம்பும் ஒரு வண்ணத்தை நீங்கள் மஞ்சள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்; என் மஞ்சள்தான் உங்களின் சிவப்பு. இதை, இல்லையென்று நம்மால் நிரூபிக்கமுடியுமா? உங்களை நான் அழைத்துக்கொண்டுப்போய், ரத்தம், குங்குமம், ரோஜா என நாம் சிவப்பு என்று நம்பும் ஒரு வண்ணத்திலான பொருட்களை காட்டுகிறேன். என் கண்ணுக்கு அவை என்னுடைய சிவப்பு நிறத்தில் தெரியும். உங்கள் கண்ணுக்கு அது உங்களின் சிவப்பு நிறத்தில் (அதாவது என்னுடைய மஞ்சள் நிறத்தில்) தெரியும். ஆக, இருவரும் காண்பது ஒரே பெயரிலான நிறத்தையேயொழிய ஒரே நிறத்தை என்று சொல்லிவிட முடியுமா? பிறப்பிலிருந்தே நாம் பார்க்கும் அந்த வண்ணக்கலவையிலான காட்சிகள்தான் எல்லோர் கண்களிலும் தெரிகிறதா? வேகமாக படித்திருந்தால் இந்த பத்தியில் நான் சொல்லியிருக்கும்...

96, Rosy retrospection, சில பொய்கள்...

பள்ளிக்கூட காதல் என்று இதுவரை காட்டப்பட்ட திராபைகளிலிருந்து, இந்த படம் கொஞ்சம் வெளியே வந்திருக்கிறது. கொஞ்சம்- அவ்வளவுதான். மற்றவை எல்லாம் கொஞ்சம் ஓவராகத்தான் கூவுகிறார்கள் என்ற தொனியில்தான் இருக்கிறது. ரொமாண்ட்டிசைஸ் செய்யாமல் யோசித்துப் பார்த்தால் இந்த படத்திற்கான முழு பாரமும் முதிர்ந்த ஜானுவின் தோள்களில்தான் ஏற்றிவிடப்பட்டிருக்கிறது. காய்ந்துக்கொண்டிருக்கும் த்ரிஷாவின் மஞ்சள் நிற காட்டன் குர்த்தியை இறுதியில் காட்டும்போது அத்தனை நிசப்தம்.  படத்தில், தஞ்சாவூரைக் காட்டும்போதே தியேட்டர் அல்லோலகலப்படுகிறது. ஃபிலோமினா நகர், மஹாராஜா சில்க்ஸ் என்றெல்லாம் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஏதோ தல-தளபதி ரெஃபெரன்ஸ் வந்ததைப்போல ஆரவாரம். நம்மைப் பொருத்திப்பார்க்கும், நம்மோடு தொடர்புடைய ஒரு விஷயத்தை காட்டும்போது நிகழும் பரவசம் அது. அப்படி யாரும் இந்த படத்தின் காதல் காட்சிகளில் ஒன்றினார்களா என்று தெரியவில்லை; அவை ஒரு சினிமாவிற்கான புனைவு சுதந்திரத்தில் ரம்மியமாக படமாக்கப்பட்டிருப்பவை. அவ்வளவுதான். மற்றபடி இங்கு வந்து 'அது வந்து...என்னுடைய பள்ளி பருவத்தில்...' என்று எழுதப்படுபவை எல்லாமே ரொமாண்ட்டி...

பிம்பங்கள்

நண்பன் படத்தில் ஒரு இண்டெர்வியு காட்சி வரும். அதிகம் கொண்டாடப்பட்ட போலித்தனமான படத்தில் வந்த போலித்தனமான ஒரு காட்சி. கை கால்கள் முறிந்து, தேறி வந்து சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி ஜீவா பதிலளித்து கொண்டிருப்பார். இனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்ற ரீதியில் தத்துவார்த்தமாக அந்த பதில்கள் இருக்கும். நிறைவாக, உங்கள் வேலையை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள், என் ஆட்டிடியுடை (சரியான தமிழ் பதம்?) நான் வைத்துக்கொள்கிறேன் என்பார். அவருக்கு அந்த பணி வழங்கப்படுவதோடு, டிப்ளோமேடிக்காக இல்லாமல் நேர்மையாக இருந்தமையால்தான் அது வழங்கப்பட்டதாகவும் காரணம் சொல்லப்படும். கொஞ்சம் அந்த காட்சிக்கு சில்லறைகளை சிதறவிட்ட பின் இயல்வாழ்க்கைக்கு வருவோம். தூங்கி எழுவதிலிருந்து, மீண்டும் தூங்க செல்லும் வரை எத்தனை முகமூடிகள் நமக்கு தேவைப்படுகின்றன. அம்மாவிடம், மனைவியிடம், கணவனிடம், தங்கையிடம், காதலனிடம், ஆட்டோ ட்ரைவரிடம், மேலாளரிடம், ஹோட்டல் வெயிட்டரிடம், குழந்தைகளிடம் என ஒவ்வொரு மட்டத்திலும் காரியம் சாதித்துக்கொள்ள எத்தனை வேஷம் தரித்துக்கொள்கிறோம். சில வேஷங்கள் நாமே மறந்து போய் நம்மோடே நிரந்தரமாகும் அளவிற்கு அத்தனை போ...

ஸ்வீட் ட்ரீம்ஸ்

எம்பிபிஎஸ் முடித்துவிட்டு எம்எஸ் சேருவதற்குமுன் நானும் நண்பனும் திருவல்லிக்கேணியில் தங்கி நுழைவுத்தேர்விற்காக ஆயத்தமாகிக்கொண்டிருந்தோம். அது கொஞ்சம் கட்டுக்கோப்பான மாணவர் விடுதி. உடனிருப்பவர்கள் பெரும்பாலும் சி.ஏ. மாணவர்கள், மற்றவர்கள் சட்டக்கல்லூரி மாணவர்கள். அந்த விடுதி வார்டன் 60-70 வயதுக்காரர். அவரது மனைவிக்கு ஒரு சாமான்யனுக்கு தெரியும் எல்லா நோய்களும் இருந்தன. விடுதி வளாகத்திற்குள்ளேயே இருக்கும் அவரது வீட்டிற்கு, அவ்வப்போது எதும் மருத்துவ உதவிகள் வேண்டுமெனில் அழைப்பார். நானும் நண்பனும் செல்வோம். நாளடைவில் இது கொஞ்சம் அதிகமானது. முதலில் அவர் அழைக்கும்போது அதிலொரு தயக்கம் தெரியும். பின்னர் அது இல்லாமல் போனது. அவர் உரிமையாக எங்களிடம் பழக ஆரம்பித்துவிட்டார் என்பதைவிட, கொஞ்சம் அதிகார தொனியில் நடந்துகொள்ள ஆரம்பித்துவிட்டார் என்றுதான் எங்களுக்கு தோன்றியது. அல்லது, அதுநாள் வரை இருந்த அந்த சிறு தயக்கத்தை, எங்களின் ஈகோ உள்ளூர ரசித்திருக்கவேண்டும். கசப்பு வந்துவிட்டது. அதில் மேலும் பாகற்காயை பிழிந்துவிட்டது அந்த விடுதியின் வாட்ச்மேன். அவர்தான் எங்களை அழைக்க வருபவர். முதலிலெல்லாம் அறைக்...

மாற்றான் காலணி

இந்த வருடத்தில் எனக்கு ரொம்பவே பிடித்திருந்த இரண்டு படங்களும் ஏதோவொரு பொதுத்தன்மை இருப்பதாக தோன்றியது . அது இதுவாகத்தான் இருக்கமுடியும் . முதலில் , துருவங்கள் பதினாறு . படத்தில் அத்தனை உண்மைகளும் உடைத்து சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் , ரஹ்மான் அந்த கெளதம் என்ற கதாப்பாத்திரத்திடம் சொல்வார் , ' இந்த மொத்த கதையையும் உன்னோட பார்வைல சொன்னா , அதுல நான்தான் வில்லன் ' என்பார் . அந்த ஒரு வசனம் அந்த படத்தை பத்து படிகள் தூக்கி நிறுத்தியதாக எனக்கு தோன்றியது . படம் முடிந்து வீட்டிற்கு வரும்போது கெளதம் தரப்பிலிருந்து கதை சொல்லப்படுவதை யோசித்துக்கொண்டுதான் வந்தேன் . இது விருமாண்டிக்கும் கொத்தாலனுக்கும் இடையேயான உண்மை / பொய் கதைசொல்லலல் அல்ல . ஒரே கதை . அதிலிருக்கும் இரு முக்கிய பாத்திரங்களின் கண்களின் வழி அதே உண்மை கதை . இங்கு கதை என்பது வெறும் கதை மட்டுமல்ல . அந்த பாத்திரங்களே அவற்றை விவரிக்கும்போது , அதில் வெளிப்படும் பேருணர்ச்சிகளும் சேர்ந்ததுதான் அதன் முழுவடிவம் . மூன்றாம் மனிதன் கதை சொல்வதைவிட , எழுத்தாளனே கதை...